அதிரூபவதிக்கு… (14)

உன் எழுதுகோலை எடுத்ததற்காகத்
திருட்டுப் பட்டமா தருகிறாய்…
உன்னையே
திருடப்போகும்
எனக்கு!

……………………………………

அதிகமாகவே
ஆசைப்படுகிறேன்
கனவில் கூட
வராத உன்னை…
மனைவியாக்கிக் கொள்ள!

…………………………

உன்
விழிக் கத்திகளால்
குத்திக்கொண்டே இரு….
என் காதல்
உயிர் வாழட்டும்.

…………………………………………………

உயரப் பறந்து
கொண்டிருக்கிறேன்
தாழ்ந்த கிளையில்
நீ என்
கரம் பற்றிய
கணத்தில்.”

About The Author