அதிரூபவதிக்கு… (16)

உன்
கூந்தல்
காற்றில்
அசைந்து எழுதும்
அற்புதமான
கவிதைகளை விடவும்
சிறப்பான கவிதைகளை
ஒருபொழுதும்
என்னால் எழுதிவிட முடியாது!

…………………………………………

அழுதுகொண்டே சிரிப்பதற்கும்
சிரித்துக்கொண்டே அழுவதற்கும்
யாரும் சொல்லித்தரத் தேவையில்லை…
உன் காதலனான எனக்கு.
……………………………………………………………………………………………….

நீ
என்னை
வெறுக்கும் தினம்
கணம் மாறும்
உன் மனம்…
சகதியாகுமா?
சந்தனமாகுமா?

……………………………………………………

மறுபடியும்
எங்களூர்
விழாக்கால இரவுகளை
நினைவுபடுத்துகிறது
உன் புன்னகை.

About The Author