அதிரூபவதிக்கு… (19)

உன்னைப் பற்றி
அதிகம் தெரிந்த
எனக்குதான்……
என்னைப் பற்றி
எதுவும் தெரியாது!

………………………………………

உன்
கரம் பற்றி
கடற்கரை மணலில்
காலார நடக்க
ஆசைதான்.
ஆனால்
ஏனோ
ஒத்துழைக்க மறுக்கின்றன…
எனது போலியோ கால்கள்.

………………………………………

எந்தப் பெண்ணைப்
பார்த்தாலும்
அவர்களுக்குப்
பின்னேயே செல்கிறது…
என் கவிதை மனம்!

………………………………………

உன்
கண்களைப் பார்த்த
பிறகுதான்
என் கண்களும்
பேசும்
பாக்கியத்தைப் பெற்றன!

About The Author