அதிரூபவதிக்கு… (8)

நீ
உனக்குத் திருமணமாகக்
கோயில் சுற்றி வருகிறாய்…

நான்
நமக்குத் திருமணமாக
உன்னைச்
சுற்றி வருகிறேன்!

*****************************

வசீகரிக்கும் வார்த்தைகள்
கவர்ந்திழுக்கும் கற்பனைகள்
பாராட்டி உயர்த்தும் பொய்கள்
இவை எதுவும்
என் கவிதையில் இல்லை…
உன் மேல் கொண்ட
உண்மைக் காதலைத் தவிர!

*****************************

எதைப் பற்றியும்
கவலைப்படத் தெரியாத
எனக்கு
கவலைப்படுவதற்கென்றே
கடவுள் கொடுத்த வரம்…
நமது காதல்.

*****************************

அடிக்கடி
செல்லமாய்
நீ
தலையில் கொட்டுவதை
நினைவுபடுத்தியது…
சற்று முன் பெய்த
ஆலங்கட்டி மழை.

About The Author