அதீதாவுக்கு

25.

நின் ராஜ்யத்தில்
அகதியாய்ப் புக முயன்ற என்னை
அண்டவிடாது
அலைகடலில் துரும்பென
அலையவிட்டாய்.
பரவாயில்லை
எவ்விதமோ
தூர இருந்தாவது
‘பார்த்து’விட்டேனல்லவா
நின் ‘ராஜ்யத்தை’
மற்றுமதன் ‘ஆள்கை’யை!

26.
நில்லாது விரியும்
அண்டமென
விரிவு காணுதுன்
தீமலர் யோனி-
அறுதப்பழசான
அண்டசராசரத்தை
அநாயசமாய் விழுங்கி.
நின்னால் நிர்ணயிக்கப்பட்ட
புதிய ப்ரபஞ்சத்தில்
நீயும் நானும் மட்டும்
நிர்வாணமாய்
ஆடைகளேதுமற்று.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author