அதீதாவுக்கு

27.

குவலயம் மணக்க
பூத்துக் குலுங்கி
சிரித்து மலர்கிறாய்
பரவசமாய்.
உன்னின்றெழும்பும்
புதிய நறுமணம்
கொள்ளை கொண்டெனைக்
குழைக்குது.
நின்னின்று பெருகும்
பேரிசை
பெருமழையாய்ப் பெருகி
நிறைக்குது மண்ணை.
அதில் நான்
நனைந்தாடி
குதூகலித்துத் திரிகிறேன்
குழந்தையாய்.

28.

தாகம்
அதிதாகம்
கொடுந்தாகம்
அதிகொடுந் தாகம்
பெருந்தாகம்
அதிபெரும் தாகம்
நீ வேண்டுமெனக்கு
நீவேண்டுமெனக்கு
நீராய்.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author