அந்தி நேரச் சூரியன்

அந்தி வேளைகளில்
அலங்காரமாய் வந்து
வண்ணக் கண் சிமிட்டி
வாவென்று அழைக்கிறாய்!

நான் மறக்கும் நாட்களில்
ஞாபகத் தூதுவர்களாய்…
உன் கதிர்க் கரங்கள்
என் வீட்டு ஜன்னல்களில்..!

நான் வரும் வேளையில்
மேகத் தலைப்புகளில்
முகம் மறைத்து – எனை
ஏங்க வைக்கிறாய்!

தினமும் என்னுடன்
இருபது நிமிடங்களுக்கு மேல்
இருக்க மாட்டேன்
என்கிறாய்..!

நாளுக்கு நாள்
நூலாகிப் போகும்
"நிலாவிற்கு"
நூறாயிரம் கவிஞர்கள்..!

ஓரிரு நாட்களே
உயிர் வாழும்
"பூக்களுக்கோ"
பல்லாயிரம் பாடகர்கள்..!

என்னைப்போல் யாரேனும்
ஒருமுறையாவது உன்
"தங்க முகத்தை"
தரிசித்திருந்தால்…
அழைத்து வா என்னிடம்
ஆனந்தப்படுவேன்..!

About The Author

13 Comments

  1. Badrinath Raghavendran

    The world waits and waits until he or she is famous before appreciating them. Its time for you to get more appeciation… very simple and straightforward poetry. very nice.. Keep up the good work…

  2. P.Balakrishnan

    ஞாயிறு போற்றுதும் என்று பகலவனின் எழுச்சியைப் பார்த்து பக்திப் பரவசத்துடன் தொழுபவர்கள் உண்டு.அந்திச் சூரிய வேளையில் பூஜை செய்பவர்களும் உண்டு. நகர வாழ்க்கையில், ஒண்டுக் குடித்தனங்களில், மூச்சுவிட மட்டுமே முகத்தை வெளிக்காட்டும் வசதி(?)யுள்ள மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களும், கோலங்கள் போடும்போது வேலைக்குக் கிளம்பி ,கோலம்போடும் காலையில் வீடு திரும்பும் இக்கால இளைஞர்களும் இந்த அழகுக் காட்சியைப் பார்த்து ரசிக்க முடியாதுதான். நல்ல சிந்தனையோட்டம்.பாராட்டுகள்

  3. gowrish

    னன் படித தில் மிகவம் ரசித கவிதை இது..ரொம்ப நல்ல இருக்கு..
    வழ்துக்கல்..

  4. Rethnagiri.K

    நல்ல கவிதை! தொடருங்கள் உங்கள் எழுத்தை! வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!

    இரத்தினகிரி
    (ஆனந்த் அவர்களின் நண்பன்) சென்னையிலிருந்து….

  5. ramyamarichamy

    சுபெர் சிர் ரெஅல்ய் வெர்ய் நிcஎ இலொவெ சொ முச்

  6. ramyamarichamy

    சுபெர் சிர் ரெஅல்ய் வெர்ய் நிcஎ இலொவெ சொ முச்

Comments are closed.