அரைத்து விட்ட தேங்காய்க் குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் – 250 கிராம்,
இளம் தேங்காய் – ஒரு மூடி,
நன்கு பழுத்த தக்காளி – 5,
புளி – எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் – 2½ தேக்கரண்டி,
தனியாத் தூள் – 1½ தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – ½ தேக்கரண்டி,
வெந்தயம் – ½ தேக்கரண்டி,
சீரகம் – ½ தேக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில், வெங்காயத்தைத் தோலுரித்து, இரண்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
தேங்காயைக் கீறி, ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியைக் காய வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் வெங்காயத்தைப் போடுங்கள். அது நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் போட்டு, சிறிது உப்புச் சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்குங்கள். அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், அரைத்த தேங்காய், தேவையான உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க வையுங்கள். கெட்டியான பிறகு இறக்குங்கள். குழம்பின் உப்பு, காரம், புளிப்பு ஆகியவை தேங்காயில் சேர்ந்து, சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளப் பிரமாதமாக இருக்கும்! சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

About The Author