ஆட்கொள்ள வேண்டாம்

புதிருக்கு விடை தேடி
புதுக்கவிதை எழுதினேன்
வந்த விடையோ
புதிருக்கும் புதிரானது.

விளக்கில் நிலாவைத்தேட
விழுந்த தென்னவோ குகை
விளக்கும் வேகத்தில் அணைய
இருட்டில் நானென்ன செய்வேன்?

– தவறி விழும்போது
இதயத்தில் வலி
– தப்பி எழும்போது
கண்களில் கண்ணீர்.
– மடி அரங்கத்தில்
என்னை அழவிடு
அம்பலனே நடராசா
ஆட்கொள்ள வேண்டாம் நீ !

About The Author