ஆண்மையை எப்போது உணர்ந்தேன் (2)

பின்
எப்போதுதான் உணர்ந்தேன்
நானென் ஆண்மையை?

*

என்னுயிர் தொட்டுத்
தன்னுயிர் கலந்து
புத்துயிரென்னும்
கருவோடு மிளிர்ந்தாள்

பெண்மை என்னும்
கர்வத்தோடு எழுந்தாள்

என் தாகத்திற்குத்
தாகத்தாலேயே
தண்ணீர் தந்த தேவமல்லி

என் மோகத்திற்கு
மோகத்தாலேயே
தீர்வு தந்த பவளமுல்லை

அப்போதுதான்
ஆம்… ஆம்…
அப்போதுதான் நான்
சத்தியமாய் உணர்ந்தேன்
என் ஆண்மையை

*

பெண்மையை உணர்த்துவது
ஆண்மையுமல்ல

ஆண்மையை உணர்த்துவது
பெண்மையுமல்ல

இயற்கையின் துணையோடு
இருவரும் சேர்த்துச் சமைக்கும்
உயிர்க்கரு என்ற
உன்னதக் கூட்டு முயற்சியே

*

இதில்
ஆண்மையும் ஆனந்திக்கும்
பெண்மையும் பூரிக்கும்

ஆண்மை பெண்மை
இரண்டும் ஒன்றாய்க் கலந்த
அழியா இயற்கையும்
பூத்துக் குலுங்கும்!

* (ஜீன் 2004)

About The Author