இல்லாள் படித்த இல்லாத பட்டியல்

என் கண்ணின் மணிகளுக்கு
இமையெனும் உறை போட்டு
இடர் தரும் நினைவுகளை
எட்ட தூக்கி வைத்து
கற்பனைக் குதிரையில்
கவித்துவமாய் உலா வரலாமென
கயிற்றைச் சொடுக்கினேன்

எந்தன் ஊர் தொலைவிலும்
கார்வானம் அருகிலும்
தெரியும் வேளையில்
இல்லாள் படித்தாள்
இல்லாத பட்டியல்.

புரவி தள்ளி
மேகம் சறுக்கி
ஓடு புகுந்து
விழுந்தேன் கட்டிலில்.

அருகில் குருதி தோய்த்த
கண்களுடன் என்னவள்.

About The Author

1 Comment

Comments are closed.