ஊடல்

காதலுக்கு அழகு…
எனக்கும் இயற்கைக்குமான காதல்…!
செந்நீர் ஓடையும்…
நறுமண மலர்களும்…
மலர் தொடர் வண்டுகளும்…
தோரண மழைத் துளிகளும்…
பனிக் கண்ணீர் சிந்தும்
துளிர்க் கண்களும்…
நிலா முகமும்…
குங்குமச் சூரியனும்…
நீலவான் சேலையும்…
விண்மீன் நகைகளும்…
நீ மட்டும் அழகாக…!!!???
ஓரவஞ்சனை ஏன்???

சமத்துவமறியா இறைவன்…
படைத்தான் வட்டுலகம்…
இடம் வேறு…
நாடு வேறு…
மொழி வேறு…
இனம் வேறு…
நிறம் வேறு…
விதி வேறு…
விதைத்த விதை ஆலமரமாகி…

உன் பொழுதுபோக்கு
எனது வாழ்க்கை?!

பேதமைகளுக்கு நடுவே
புதைந்து கிடக்கும்…
பூமியில் நீ தேடும்
புதையல்தான் என்ன….?

உயிர்ப் பந்தை உருட்டியது போதும்…
பற்றி எரியும் வயிறுகள் …
எத்தனை! எத்தனை!
தாய் தன் குழவியை
வருத்துவதில்லை….
நீ உன் குழந்தைகளை….?
நல்லவர் சாதி…
கெட்டவர் சாதி…
ஆயின்…
யார் நல்லவர்…?
யார் கெட்டவர்…?
விடைகளை எல்லாம்
சேர்த்து வை….

இயற்கை எய்தி
உனைச் சந்திப்பேன்…
விடைகளோடு காத்திரு…
ஒரு உலகம்…
ஒரே உலகமாய்..
ஒன்றைத் தயாரிப்போம்…!!

About The Author