ஒன்று போதும்

நூறு தடவையாவது
திரும்பத் திரும்ப
சொல்லியிருப்பேன் நண்பர்களிடம்..
நீ என்னை முதல் முறையாக
திரும்பிப் பார்த்ததை..!

இருநூறு காகிதங்களையாவது
கசக்கி எறிந்திருப்பேன்..
உனக்காக நான் எழுதிய
முதல் கவிதைக்காக..!

முன்னூறு முறையாவது
படித்திருப்பேன்..- உன்
முக்கால் வரி பதில் கடிதத்தை..!

நானூறு தடவையாவது
நாக்கைக் கடித்திருப்பேன்..
மற்றவர்களின் பெயருக்குப் பதிலாக
உன் பெயரை உச்சரித்து..!

ஐந்நூறு அல்ல,
ஆயிரமுறையல்ல..
கோடி முறை வேண்டுவேன்
ஒன்றே ஒன்று மட்டும் வேண்டுமென்று – உன்
அன்பு ஒன்று போதுமென்று..!

About The Author

16 Comments

  1. maalini

    valtukal ruso!!!!!!! kandeepa sekaramae ungaloda anbai purinjika anubavika oruvarai neenga sandeeka ennodaiya wishes.

  2. kokulan

    எனக்கு கவிதை ரொம்ப பிடித்திருக்கு… வால்துக்கள்

  3. Asha

    ரெஅல்ல்ய் சுபெர் உர் கவிதை. இ லிகெ வெர்ய் முச்.

  4. kannan

    வெர்ய் நிcஎ அன்ட் சிம்ப்ல்ய் சுபெர்ப்

  5. rajeeveprasad

    ரோசொ தெ பொஎட்ர்ய் இச் வெர்ய் நிcஎ கேப் இட் உப் ரஜேவெ(ரிக்க்ட்cலிcக்). கேப் உர் குட் ந்ர்க். மய் கொட் ஷொநெர் உ க்ரெஅட் சுccஎச்ச் சோன்

Comments are closed.