கடவுளின் காலடிச் சத்தம்(2)

ஓடையில் புதுவெள்ளம்
மணல் போர்வையில்
காணாமல் போயின மரங்கள்

*****

நல்ல வியாபாரம்
கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான்
வெங்காயம் விற்றவன்

*****

காகம் கரைகிறது
வீட்டுக்காரன் கஞ்சன்
நீயாவது போடு விருந்தாளியே

*****

பயணிகள் நிழற்குடை
மேல் அமரும் பறவையே
கீழே வா நிழலுக்கு

*****

(‘கடவுளின் காலடிச் சத்தம்‘) – மின்னூலில் இருந்து

To buy the EBook, Please click here

About The Author