கண்ணாமூச்சி ரே… ரே…!

மிழ் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கும் ‘சிம்ரன் திரை’யின் ஆகஸ்ட் மாத குறுந்தொடர் ‘கண்ணாமூச்சி ரே… ரே…!’ பெயரே அசத்தலாக இருக்கிறதல்லவா?

பெயரில் மட்டுமல்லாமல், கதைக்களத்திலும் பெரும் வித்தியாசமானதாக இருக்கும் இந்த சிம்ரன் திரையின் 6-வது குறுந்தொடரான ‘கண்ணாமூச்சி ரே… ரே…’ ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

முறைகேடான ஆசையை மனதில் வளரவிட்டு அந்த ஆசைக்கு அடிபணிந்து இழி செயல்களைச் செய்ய நேர்ந்து, முடிவில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு மனிதனின் கதை இது.

அன்பான மனைவி, அழகான குழந்தை என்று அளவான குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் சத்யன், தனது மனைவியின் தங்கையான ஜோதி மீது ஆசை கொண்டு அவளை அடைவதற்காக தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை எப்படியெல்லாம் ஆட்டுவித்துக் கடைசியில் எந்த நிலையை அடைகிறான் என்பதைத்தான் உணர்வுப்பூர்வமாக இந்த ‘கண்ணாமூச்சி ரே… ரே…’ படம் பிடித்துக் காட்டுகிறது.

5-வது குறுந்தொடரான ‘நவவெள்ளி’யில் பொருத்தமான ஆடி மாதத்தில் ஆதிபராசக்தி அம்மனாக வந்து தமிழகத்தையே அசத்திய சிம்ரன், இந்தப் புதிய தொடரில் தனது நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டப் போகிறார் எனலாம்.

இத்தொடரில் சிம்ரனுடன், ராம்ஜி, சேத்தன், பிருந்தாதாஸ், ராஜசேகர், அமரசிகாமணி, சங்கீதாபாலன், வந்தனா, குழந்தை ஹரிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு : குருதனபால்
கதை : சபரீஷ்வரன், திலீபன், மணி
திரைக்கதை, வசனம் : ஸ்ரீனிவாஸ் வெங்கடாச்சலம்
ஒளிப்பதிவு : சீனிவாஸ்
யக்கம் : பாலாஜி யாதவ்
கிரியேட்டிவ் ஹெட் : சுபா வெங்கட்

About The Author