கண்ணீரின் ஒரு துளி…..

தட்டுக் குச்சியில மாட்டுவண்டி செஞ்சு தந்த ஆத்தாளும்,
பொழுதன்னைக்கும் நெத்தில "நல்லாருக்கோணுஞ் சாமி" னு,
விபூதி பூசி உட்ர அப்பாரும் கண்ணுக்குள்ளயே இருக்கறாங்க !!..

வெளிநாடு போறேனு வெள்ளந்தி போல
சொல்லிட்டு வந்தனே ஊட்ல !
இப்டி தன்னப் போல நிக்கறனே ரோட்ல !

நம்மூரு கலெக்டரு மாதிரி சம்முனு வரோணும்னு,
காட்ட வித்து காசு குடுத்தியே !!
இப்டி திக்கு தெரியா ஊர்ல
தெருநாயா திரியறனே !!

பட்டணத்துக் கள்ளத்தனம்
இந்த பட்டிக்காட்டு பயலுக்கு
வௌங்காம போயிடுச்சே !!!

பாவிப்பய காச மட்டுமா
களவாண்டான் ??!!
எங்கப்பாரு சிந்துன வேர்வையுந்தானே !!!!

About The Author

1 Comment

Comments are closed.