கவிதைகள்

பிடித்த பாடம்

பூவிதழ்
பூக்கள்-ஏன்
தாவரவியல் பாடம் கூட
விருப்பமாகிப் போனது
எனக்கு,
உன்
கூந்தல் பூக்கள்
சிதறிய இதழ்களை-நான்
சேகரிக்கத்
தொடங்கியதிலிருந்து!

வண்ணமான எண்ணம்

பூக்கள்
வண்ணத்துப் பூச்சி
மேலும் பல
வண்ணங்களெல்லாம்
உன் தாவணிகளிலிருந்துதான்
வண்ணமெடுத்துக்கொண்டதோ!
எப்படியோ-என்
எண்ணமெல்லாம் உன்
வண்ணங்கள்தான்!

என் மனவானில்!

என்
மனவானில்
இரவெல்லாம்
நட்சத்திரங்களாய்
உன் நினைவுகள்,
பகலெல்லாம்
சூரியனாய்
நீ!”

About The Author

1 Comment

  1. rasigan. ravikumar

    மிகவும் எளிமையாகவும், ரசனையோடும் உள்ளது.

Comments are closed.