கவிதைகள்

மௌனம் பேசியதே!

தோழிகளுடன்
கலகலப்பாய்
பேசிச் செல்லும்-நீ
என்னைக் கண்டு
சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது-நம்
காதலைப் பற்றி!

தெளி காதல்

ஆளரவமற்ற தெருவில்
எதிரெதிராய் வந்துவிட,
தனிந்த நேர்ப்பார்வையில்
என் காதலைத் தர-நீயோ
குனிந்த அரைப் பார்வையால்
அள்ளித் தெளித்தாய்
பல மடங்காய்!

About The Author