கவிதைகள்

நினைவு

நீ
இன்னும் அழகாய் இருக்கிறாய்,
என் அருகில்
இல்லாத போது!

உணர்வு

பனிமலையில்
குளிர்காற்றுடன்
இளஞ்சாரல்,
உன் பார்வையால்
சிலிர்க்கும் நான்!

வெட்கம்

தளிர் நடை
விரி கூந்தல்
வெள்ளிக்கிழமை,
உன்
கூந்தல் நுனி சொட்டி
நனைந்த இடம் கூற
எனக்கு மிகுந்த
வெட்கம்!”

About The Author

1 Comment

Comments are closed.