கவின் குறு நூறு-28

81

படமாய் இருக்கும் திருவள்ளுவருக்குள்
படரும் ஆசை; கைகளில் இருக்கும்
ஏட்டுச் சுவடியை எழுத்தாணியைக்
கீழே வைத்துவிட்டுக் கவினை
எடுத்து அணைத்துக் கொள்ள.

82

சன்னல் வழியாகப் பூட்டைத்
தூக்கிப் போட்டான் குழந்தை
யார் மண்டை திறந்ததோ?

83

கவின் செய்யும் மயக்குறு
குறும்புகளைப் பார்க்கும் போதெல்லாம்
தியானம் கலைந்த புத்தர்
மனத்தில் புன்னகைக்கிறான்
அவர் புதல்வன் இராகுலன்.

About The Author