கவின் குறு நூறு-33

98

உட்கார வைப்பதற்குள்
போதும் போதும்
என்றாகிவிட்டது முதலில்.
குடைராட்டினத்திலிருந்து இறக்கிவிடப்
போதும் போதும்
என்றாகிவிடுகிறது இப்போது.

99

தன்னால் அடிபட்ட
அத்தைமகள் பொம்முலு
அழுதுகொண்டிருந்தாள்
கவின் கேட்டான் –
‘அத்தைக்கு ஏன் இப்படிக்
கோபம் வருகிறது?’

100

பிறந்த நாளைக் கொண்டாட
மெழுகுத் திரிகளை ஏற்றியபோது
ஊதி அணைக்காதீர்கள்
என்றது வெளிச்சம்;
கவின் உதடுகளில், கண்களில்
அர்த்தம் சுடர் விட்டது.
ஆம்! ஒளியை அணைத்தா கொண்டாடுவது?

About The Author

2 Comments

  1. Kalaichelvi

    ஒளியை அணைத்தா கொண்டாடுவது ? எல்லாரும் யோசிக்க வேண்டிய வரிகள்.-வை. கலைச்செல்வி, சிங்கப்பூர்.

  2. P.k.Sankar

    எங்கள் பேரன் கவினுக்கு பிறந்த நாள் அன்று தங்கள்
    கவிதை எண் 100ல் கூறியபடி ஒளியை ஏற்றி கொண்டாடினோம்.
    கவின்குறுனூறு அருமையான படைப்பு.
    பாராட்டுக்கள்.

Comments are closed.