கவியரசனே கண்ணதாசனே -3

நீ
இருந்தது
கொஞ்ச நாள்

இயற்றியது
எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த
என் அழுகை
உன்
சமாதியைக் கரைத்து
உன்னை
வெளிக்கொண்டு வருமா

என்
இனிய கவிஞனே
கவியரசனே
கண்ணதாசனே

இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன்
பிறந்தநாளுக்கு
நீ
இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

——————————————————
கண்ணதாசன்: ஜூன் 24, 1927 – அக்டோபர் 17, 1981

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here

About The Author

1 Comment

  1. v.S.Srinivasan

    my revival of thamizh karuthu very happy. This is a new vaasam inimai Mikka nanri.

    Thanks. vasu.

Comments are closed.