காதல் சிறகு

நீ பெயர் சொல்லி
அழைத்தால்
ஓடி வருவேன்
கல்லறையில்
உறங்கிக் கொண்டிருந்தாலும்!

*********

காதல் பிசாசு
என்னுள் புகுந்துகொண்டது.
உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
உதிரம் உறிஞ்சத் துடிக்கிறது.

*********

உன் அழகு முகத்தை
மறைக்கும் முடிகளை
என்ன சொல்லி
சபிப்பேன்!

*********

நீ வரைந்த கோலத்தைக்
காப்பாற்ற நான்
மழையில் நனைகிறேன்!

–சிறகு விரியும்…

About The Author