குறுங்கவிதைகள் (2)

சப்தமற்ற சங்கீதத்தில்
சுலனத்துடன் சரளிவரிசை
மாயை.

***

சாதனையின்
சந்தேகமற்ற எதிரி
சோம்பல்.

***

தர்மத்தின் பாதையை
மறந்துதான் விட்டோம்
தவறுகள்.

***

குறைகள் கூராய்க் குத்தினாலும்
பாதத்தின் நினைப்பு பஞ்சில் நடப்பதாய்…
பெருந்தன்மை.

***

இந்திய சிற்பங்கள்
வெளிநாட்டவர் வாங்கலாம்
மதிப்புமிகு கலைக்கூடம்.

***

யாரோ இல்லை எவரும்‘ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here

About The Author