குறுங்கவிதைகள்

வானவில்

என் ஏழு பிறவியின்
தொகுப்பென்றால்,
என் இப்பிறவியின்
நிறம் என்ன?

அம்மாவின் இழப்பு

அருகில் இருந்தவரை
அருமை தெரியவில்லை
அருமை தெரியும் பொழுது
அழுகை நிற்கவில்லை

சிகரெட்

வட்ட வட்டமாய்
விட்ட வளையங்கள்
அவன் மேலேயே வந்து விழுந்தன
மலர் வளையங்களாய்

நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரத்தில்
பிறந்த குழந்தை,
தாய்மாமனைக் கொல்லும்
என்று புலம்பும்
அறிவிலிகளே! அவன்,
கண்ணன் போல் கீதை சொல்வான்
என்று மகிழ மாட்டீரா?”

About The Author

1 Comment

Comments are closed.