சென்ரியூ – நகைப்பாக்கள் (2)

தேர் வராத சேரிக்குள்
தேசமே வரும்
தேர்தல் நேரம்!

*****

ஏட்டிக்குப் போட்டி
பேசும் பாட்டி
இறந்த பிறகும்
மூடவில்லை
வாய்!

*****

வாய்ப்பாட்டு பாடுபவனின்
வயிற்றிலும் பாட்டிலும்
பசி

*****

நன்றியுள்ள நாய்
வாலை ஆட்டியது
திருடனுக்கு

*****

மனதில்
எழுதுகோல் பற்றிய கவிதை
மை தீர்ந்த பிறகும்!

*****

எந்த பனித் துளிக்குள்
ஒளிந்து கிடக்கிறது………
என் கவிதை.

*****

About The Author

1 Comment

  1. magudadheeban

    மிகவும் அருமை . . .
    மூன்று வரிகளில் மூவுலகு அளவு
    தொடர்க கவிகள் . . .
    வாழ்த்துக்கள்

    -மகுடதீபன்
    http://kavithai1000.wordpress.com

Comments are closed.