ஜோதிடம் கேளுங்கள்

ஜோதிடம் கேளுங்கள் – காயத்ரி பாலசுப்ரமணியன்

எனது ராசி ரிஷபம். ரோகிணி நட்சத்திரம். லாரி வாங்கியதில் பெரும் நஷ்டம். இதனால் எனக்கு கடன் பிரசனை அதிகமாக உள்ளது. தாங்கள்தான் எனக்கு ஒரு நல்ல வழியைக் காண்பிக்க வேண்டும். – நாகமுத்து, காட்டுப்பரூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் நாகமுத்து அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி. ராசி ரிஷபம். லக்னம் மிதுனம். தங்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருப்பதால், கணக்கு வழக்குகளை சரி பார்த்தல், வேலைகளை மேற்பார்வை இடுதல் போன்றவற்றை தாங்கள் சிறப்பாக செய்யலாம். கடன் தொல்லை தீர ஞாயிற்றுக் கிழமை தோறும் பைரவரை வழிபட்டு வரவும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

எனக்கு திருமணமாகிவிட்டது. நான் பங்கு மார்க்கெட்டில் நிறைய பணத்தினை இழந்துவிட்டேன். அடுத்து எப்படி சம்பாதிப்பது என்று தெரியவில்லை. தகுந்த ஆலோசனையைச் சொல்லுங்கள்? ரமேஷ், செங்கம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரமேஷ் அவர்களே !

32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம். ராசி விருச்சிகம். லக்னம் ரிஷபம். தங்கள் ஜாதகத்தில் சனி 4-ல் வலுவாக இருப்பதால் தங்களின் கல்வித் திறமைக்கு ஏற்றவாற்று பணியில் அமர்ந்தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திறமையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வேலையில் ஈடுபவதன் மூலம் தங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ளலாம். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

பதில் அளித்தவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author