ஜோதிடம் கேளுங்கள்

நாங்கள் காதலித்து வந்தாலும் எங்களுக்குள் இப்போது இழுபறி நிலைமையாக உள்ளது. இது முடிவுக்கு வருமா? திருமணம் நடக்கும் வாய்ப்பு எப்படி!? வாழ்க்கை எவ்வாறு அமையும் எனத் தெரிவியுங்களேன். – ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. ராஜா அவர்களே!

கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தற்போது 28 வயது ஆகிறது. தங்களின் ஜாதகப்படி காதல் திருமணம் நிறைவேறும் வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் கடக லக்னத்தைச் சேர்ந்தவராதலால் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுப்பீர்கள். எனவே, முடிவெடுக்கும் முன் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நலம். தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களின் ராசியான கன்னியிலிருந்தும், உங்கள் காதலியின் ராசியான மீனத்திலிருந்தும் குரு நல்ல இடத்தில் உள்ளதால் இந்த வருடம் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தங்களின் காதல் திருமணம் கை கூட, மதுரைக்கு அருகில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலில், மன்மதன், ரதி சிலைகள் உள்ளன. தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஒரு தடவை சென்று காதல் தெய்வங்கள் இருவரையும் தரிசனம் செய்து வாருங்கள். தங்களின் திருமணம் கை கூடும்.

******

தற்போது எனக்கு அதிக அளவில் கடன் இருக்கிறது. அது எப்போது தீரும்? என்னால் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியுமா? – சரவண கார்த்திகேயன், ராஜபாளையம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சரவண கார்த்திகேயன் அவர்களே!

தனுர் லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தற்போது 28 வயது ஆகிறது. தங்களின் ஜாதகப்படி 11-ம் வீடு எனப்படும் லாபஸ்தானத்தை சனி தன் மூன்றாம் பார்வையால் பார்ப்பதால், தாங்கள் சொந்த பணம் போட்டு வியாபாரம் செய்தால் லாபம் என்பதை உடனடியாகப் பெற முடியாது. எனவே, தாங்கள் மேற்பார்வை பார்ப்பது போன்ற வேலையைச் செய்யலாம். தங்களின் ராசியிலிருந்தும், லக்னத்திலிருந்தும் குரு நல்ல இடத்தில் இருப்பதால், தங்களின் கடன் தொல்லை இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ந்து விடும்.

******

எனக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருகிறது. சில நேரங்களில் செத்துவிடலாம்போல் இருக்கிறது. ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. தயவு செய்து தெரியப்படுத்துங்கள். – அகிலாண்டேஸ்வரி, எடையூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி அகிலாண்டேஸ்வரி அவர்களே!

மிதுன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தற்போது 22 வயது ஆகிறது. தாங்கள் மிதுன லக்னத்தைச் சேர்ந்தவர். ஆதலால், பல நேரங்களில் தெளிவான முடிக்க முடியாமல் குழம்பும் நிலை இருக்கும். தங்களின் நட்சத்திரத்திற்கு அதிபதி சந்திரன். தாங்கள் பிறர் சொல்வதை சட்டென்று நம்பி விடுவீர்கள். எனவே, எதனையும் அமைதியாக ஆலோசனை செய்து நல்ல தீர்க்கமான முடிவெடுத்து செயல்படுங்கள். தங்களின் ஜாதகத்தில் குரு 9-ல் நன்றாக உள்ளது. வாழ்க்கை பல வளங்களை அள்ளித் தர தயாராய் இருக்கிறது. கவலைப்படுவதை விட பிரச்சினைக்கான தீர்வுகளைக் கண்டுடியுங்கள். வழியும் தானே புலப்படும். மனதை ஒருமுகப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்து வாருங்கள். எதிர்மறையான எண்ணங்கள் தானே மறைந்து விடும். சிறப்பான வாழ்க்கை பெற நிலாச்சாரல் உங்களை வாழ்த்துகிறது.

***********************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.”

About The Author

6 Comments

  1. iniyan balaji

    திருமதி காயத்ரி சுப்ரமணியம் அவர்களே என் பெயர் இனியன் பாலாஜி. நானும் ஒரு ஜோதிடர்தான்.கே.பி.முறையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.கே.பாஸ்கரன் முறையும் மேலும் சிஸ்டம் அப்ரோச் என்னும் வி.கே சவுத்ரியின் முறையும் கற்றுக் கொண்டேன். நேற்று கூட ஒரு ஜாதகம் காண நேர் ந்தது. பெங்களூரில்
    பிற ந்த ஒரு பெண்ணிற்கு விவாகரத்து ஏற்படும் நிலை உள்ளது. 6 மணி .5 நிமிடங்களில் பிற ந்தவள். 6 மணி 4 நிமிடதில் பிற் நதிரு ந்தாலும் அல்லது 6மணி 6 நிமிடத்தில் பிற ந்திரு ந்தாலும் தப்பியிருக்கலாம். குறை ந்தது ஒரு நிமிட வித்தியாசத்தில் பெரிய் வேறுபாடுகளை காட்ட வல்ல கேபி முறையை படித்தபோதிலும் எனக்கு பாரம்பரிய ஜோதிடத்தின் மீது ஒரு தணியாத காதல் உண்டு. நிறைய நூல்களை படித்த போதும் இன்னும் ஒரு திருப்தி அடையவில்லை. எததனையோ பேர் என்னிடம் ஜோதிடம் பார்க்க வ ந்த போதும் நான் சொல்வது பல முறை பலிதத போதும் கூட எனக்கு பணம் வாங மனம் வரவில்லை. சரி .விஷயத்திற்க்கு வருகிறேன். திருமண பொருத்தம் பற்றி பலரும் பல விதமாக கூறுகிறார்கள். அதில் ஒரு ச ந்தேகம்.ஏனெனில் மேற்கண்ட முறைகளில் நேரம் மிகவும் சரியாக இருக்கவேண்டும். 2ல் ராகு இரு ந்தால் அதே போல் 2ல் ராகு இருக்கும் பையனை த்தான் திருமண்ம். செய்விக்க் வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். சில பெரிய ஜோதிடர்கள் இல்லை என்றும் கூறுகின்ற்னர். ஒரு மீன லக்ன பெண்னிற்கு 2ல் ராகு. ஆனால் சனி உச்சம் .குரு மகரத்திம் செவ்வாய் கடகத்திலும் நீசமடை ந்து நீச பஙக ராஜ யோகம். என் கின்றனர். மன்னிக்கவும் . எங்களுக்கு உச்சம் நீசம் எல்லாம் கிடையாத போதிலும் தங்கள போன்றோரிடம் கேட்டு தெரி ந்து கொள்ள விரும்புகிறேன். தாங்கள் ஏதாவது இது சம்ப ந்தமாக புத்தகம் எழுதி உள்ளீர்களா ? இரு ந்தால் தெரிவிக்கவு.ம். ஏனெனில் க்ற்றது கை மண்ண்ளவு. தா ஙகள் சென்னை க்கு வ ந்தால் என் இல்லதிற்கு வர முடியுமா? பொருத்தம் பற்றி தா ங்கள் ஏதாவது புத்தகம் பரி ந்துரைக்க முடியுமா?
    தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கும் நண்பன்.
    நன்றி/
    பாலாஜி இனியன்

  2. kala

    i have suryan and sani in my seventh place. my lagna is mithuna.
    what about my future marriage life.

  3. jayakumar

    சந்திரனும், கெதுவும் கூடி இருந்தால், இதில் சந்திரன் உச்சம் அக இருந்தால் என்ன பலன் கிடைகும், மெலும் ஜாதகன் சந்திரன் தெய் பிரை-யில் ஜனீத்து இருந்தல் என்ன பரிகரம் செயயவென்டும் ?

  4. M.S.Srnivas sharma Astrologer

    அம்மா உங்களின் பதில்கள் ரம்யமாகவும் மனதிற்க்கு சுமை குரைப்பதாகவும் உள்ள்து பராட்டுக்கள்

Comments are closed.