ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணமாகி 9 வருடங்கள் ஆகிவிட்டன. அதிலே ஒரு தடவை கருத்தரித்து கருச்சிதைவு ஆகிவிட்டது. எனக்கு எப்போது குழந்தைச் செல்வம் கிடைக்கும்? – லில்லி நெப்போலியன், தஞ்சாவூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி லில்லி நெப்போலியன் அவர்களே,

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி துலாம், லக்னம் சிம்மம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு 8-ல் மறைந்திருப்பதால் புத்திர பாக்கியம் தாமதப்படுகிறது. வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது திருச்செந்தூர் முருகனை தரிசிக்கவும். தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முகக் கவசம் படித்து வாருங்கள். புத்திர பாக்கியம் உண்டாகும்.

******

எனது திருமணம் 28.12.2005 இல் நடைபெற்றது. இருப்பினும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. எனது கணவர் என்னை விட வயது குறைந்தவர். குழந்தைகள் இல்லாததினால் எங்களிடையே நிறைய பிரச்சினைகள் எழுகின்றன. சிறிது காலம் பிரிந்திருந்த என் கணவர் மீண்டும் திரும்பி வந்து என்னுடன் வாழ்கிறார். தயவு செய்து என் வருங்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியுமா? எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இருப்பின் என்ன பரிகாரம் செய்யலாம்? உங்கள் பதிலுக்காக மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். – ரெஹானா பர்வீன், கடலூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி ரெஹானா பர்வீன் அவர்களே,

தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம் துலாம். செவ்வாய் 4-ல் ராகுவுடன் சேர்ந்துள்ளதால் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை. கோசார ரீதியாக, தங்களின் ராசியிலிருந்து 5-ம் இடத்தில் குரு உள்ளதால் புத்திர பாக்கியத்திற்கும், குடும்ப ஒற்றுமை பலப்படுவதற்கும் இது ஏற்ற காலம். அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர, கணவரின் அன்பை மீண்டும் பெறுவதுடன் குழந்தை பாக்யமும் கிட்டும்.

******

எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?
ர.செல்வம், பெலாசூர், போலூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு செல்வம் அவர்களே,

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீடம், ராசி மிதுனம், லக்னம் விருச்சிகம். நடப்பு திசைப்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வேலையில் தாங்கள் அமர்ந்து விடுவீர்கள். தங்கள் நட்சத்திர அதிபதியான செவ்வாயை, செவ்வாய்க் கிழமை தோறும் வழிபட்டு வர, தாங்கள் விரும்பிய துறையில் வேலை கிடைப்பதுடன், தங்களின் தொழில் வளமும் சிறப்பாக இருக்கும்.

***********************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. deepshika

    ஈட்ச் இன்டெரெச்டிங். ளெட் மெ க்னொந் கொந் டொ சென்ட் தெ ஃஉஎரிஎச் அன்ட் ந்கென் இட் நில்ல் பெ அப்பெஅரிங் ஒன் திச் சிடெ.

Comments are closed.