துணையெழுத்து

இதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன? பொய் என்பது நிழல். நிழலுக்கு உருவம் அத்தியாவசியம் அல்லவா? தமிழில் துணையெழுத்துப் போன்ற பொய். துணையெழுத்துத் தனியே அமையுமா? துணைக்கால் எழுத்துத் தனியே அவனை நோக்கிப் பிய்த்து வீசப்பட்ட கால்தான். அது முற்றிய இரவு. நிலா அற்ற இரவு. ரயில் தண்டவாளத்தில் அவன். அந்த இன்னொரு அவன் நடந்து வருகிறான். நான் இரு தண்டவாளப் பாதக் கருங்கல் குவியல்களுக்கு நடுவே. என்னைப்போல அவனும் மாதக்கடைசி எனும் பிசாசின் வாயில் அகப்பட்டவனா? பெண்களுக்கு மாதாந்திர உபாதை போல, ஆண் ஜென்மங்களுக்கு இது. கிழவன் தாறுமாறாக புதரிட்டிருந்த கன்னம். வெண்ம கரும என முடிக்கற்றது. காவி வேட்டி. சட்ட முழுக்கச்சட்ட. நான் அலுத்திருந்தேன். அவன் அந்நேரம் அங்கே கூட நடந்து வருவது எனக்குப் பிடிக்கக்கூட இல்ல. ஆனால் அவனில்லாத வெளி மேலும் அச்சுறுத்துவதாக இருந்திருக்கலாம். அவனே அச்சுறுத்தலாகிப் போனான். அவனுடன் பேச அலுத்திருந்தேன். முயற்சிக்கக் கூட இல்ல பஸ்சுக்கு.– எரிச்சல், காசில்ல. டிக்கெட் இல்லாமல் ரயிலேறி, ரயிலயும் காணவில்ல. இறங்கி நடக்க, அலுப்பு… ஆரம்பித்தேன்.

நேரமாகி விட்டது. சற்றுப் பயந்தவன்தான் நான். ஒருவேள ரயில் வந்விடும், வரவில்ல. நட. தண்டவாளத்த விட்டு இறங்கிக் கல்லற்ற பாதயில் நடந்த சிறிது நேரத்தில் என் இடப்பக்கமாய் அவன் அந்த இன்னொரு அவன் கிழவன். அவனத் தண்டவாளம் வழியே நடக்க வத்தது எந்த விதி தெரியாது. கயில் கழி. பிச்சக்காரர்கள் கட்டாயம் கழி வத்திருக்கிறார்கள். வழிமறிக்கிற, ஆட்சேபிக்கிற தெருநாய்கள விரட்டச் சௌகரியம். சற்று தூக்கக் கலக்கமாய்த்தான் இருந்தது. நினவுகள் கனவுச்சாயக் கொண்டிருந்தன. அலுப்பு வேறு. ரயில் வராது. அது அந்தப் பொய் நடந்தது. கழி அவன மூன்றாவது கால் எனக் கூடக் கூட எட்டி வந்தது. நிஜக்காலுடன் தனியே கழி, சூம்பிய கால். பிச்சைக்காரன். முந்தைய ஸ்டேஷனிலேயே ஒடுங்கிக் கொண்டிருந்திருக்கலாம். கடும் இரவில் நான் வீடு என்கிற சம்பிரதாயக் கூட்டுக்கு அலுப்புடன் போகிறேன். அதைவிட வியர்வையற்ற காற்றுப்போக்கான நல்லிடம் ஸ்டேஷன் பிளாட்பார ஓரங்கள். ஏன் நடக்கிறான் கிறுக்குப்பயல். வேல மெனக்கெட்டு!

சாவ நோக்கி நடந்திருக்கிறான்.
என்ன ஜரூர். துக்கமாய்க்கூட அவன் இல்ல போல. நகரத்தில் ஊர் நடுவே கூவம். மற்றும் தண்டவாளப் பூநூல். பூமிக்கு உபநயனம் செய் வச்சாப்போல. ரெண்டு பக்கமும் ஊர் கிடந்தாலும் ஒரு பக்கம் குடியிருப்புகள். மறுபுறம் முள்ளுக்காடு. சாக்கட. குடிச. யாராவது எந்த ராத்திரியிலும் குடிசக்கு வெளியே தடுக்கு மறப்பில் குளிக்கிறார்கள். யார் வரப் போகிறார்கள் என சில பெண்கள் அலட்சியக் குளிப்பு குளிப்பம் காணக் கிடக்கக் கூடும். பூப்சி ரப்பர ஒட்ட வெச்சாப்போல விநோத உதடமப்பு கொண்ட பன்றிகள். அவைகளின் விகார உருமல்கள். சாக்கடய உழப்பித் திரிகின்றன. சில குடிசவாசிகள விடவும் சுத்தமாக. வலது சிறு ஊடு பாத. திடீரெனத் தவளைகள் முன்கிடந்து, அவன் கிட்டே நெருங்க, துள்ளி கலவரப்பிச்சக்காரன் கவலையே படாமல் கழிய வீசி வீசி நட போடுகிறான். பிச்சயெடுப்பதில் ஒரு சுதந்திர உணர்வு இருக்கத்தான் செய்கிறது. கால திரும்பவும் இவன் வேலக்கு ஓட வேண்டும். அந்தப் பிச்சக்காரன்.

அவன மற. யாரோ ஒருவன். கிழவன். ஓஹ். பிச்சக்காரன். இருளில் தெரியவில்ல. எனினும் அருவருப்பானவனாக அங்கங்கள் குறுகியவனாக அவன் இருக்கவும் கூடும். காலும் அரக்கால் என உரு சிறுத்திருக்கக் கூடும். காலே சிறுத்துப் போனான் அதற்கப்புறம். கற்பாதயில் வெளிச்சம் சீராக இல்ல. மூத்திரம் போய்க் காயாத மாதிரி சில இடங்களில் கருப்பு கட்டிய இருட்டு. சில இடத்தில் தெளிந்த ஆனால் மூத்திர வாட மாத்திரம் அடிக்கிறது. நாயொன்று எதயோ குதறியிழுத்து பல்தெரிய அக் அக்கென சுவக்கிற. தேவயில்லாமல் அவன் மணி பார்த்து சத்தம். ரயில். தூக்கக் கலக்கத்தில் முன்பக்கமா பின்பக்கமிருந்தா எனப் பதட்டம். தண்டவாளங்களுக்கிடயே மண்பாங்கான பிரதேசத்தில் இருந்தாலும் அதன் அதிர்வுகள் துடிப்புகள் எப்போதும் அவனக் கலவரப்படுத்தும். ஒவ்வொரு தடவயும் படுத்தும். அந்தப் பக்கம் வளவான ரயில்ப்பாத. இடுப்புப் பாத. தண்டவாள பெல்ட். பயம். நின்று விடுவது நல்லது. மூள உதறிய. ஆ ஆ ஆ ஆ. அந்தக் கிழ… ரயில். பெரும் பசி. வீராணம் திட்டப் பெருங்குழாயில் இருந்த தண்ணீர், வெளிச்சம் பீய்ச்சியபடி திருப்பத்தில், பாம்பு, பெரும் வேகம், அவன் – ஊஊஊஊஊஊ – ஊமயின் ஊள. மனிதக் குரலே அல்ல. ரயில்க்கூவல் தனி ரகம். ரயில் இவனப் பார்க்க எடுத்த பயப் பேரதிர்வில் இவன் ஊஊஊள கலந்த, பீய்ச்சியடித்த தண்ணீர் போன்ற வெளிச்சப் பாய்ச்சலில் அப்படியே… உட்கார்ந்தான். இவ பொய்கள். நினக்கிறேன். அந்தக் கழி எட்டிவந்து என்ன நெற்றிப்பொட்டில் மோதியது. முட்டியது. சமாளிக்க முடியாமல் தள்ளாட்டம். விநாடிக்கும் குறைந்த நேரம் ஒரு கால், என் முன்னே ரத்தம் தெறிக்க வந்து, விழுந்து, எப்பா என்ன ஆட்டம். ஜி ஜி ஜி ஜிங்குசக்கா ஜினுக்குஜிக்கா. என்னவோ தாளம். என்ன குரூர ஆட்டம். காலுக்கு மாத்திரம் பைத்தியம் பிடித்திருந்தது.

அடித்துச் சுருட்டி வீசிவிட்ட ரயில். உடம்பின் பிற அவயவங்கள் எங்கெங்கோ… மளுக். காட்டு மிருகம் உணவெடுக்கிற. வெளிச்சத்துக்குப் பயப்படாத காட்டு மிருகம் ரயில். நர மாமிசம். நடந்ததெல்லாம் பொய்தான். பெரிய அதிர்ச்சியுடன் உடல் நடுங்க ஓட ஆரம்பித்தான். பெருங் குளிரென பயம் பயம்ம்ம்ம் ஆட்டியது. கால் பேசுமா? பேசியது. என்னை விட்டுப் போகாதே. போகாதே. இது உண்மை. என்னக் கூட்டிப் போ, என்று கூட நொண்டி நொண்டி ஓடி வந்த கால். யாரோ பாண்டி விளயாடுகிறார்கள். யாருடன்? கிழவனுக்கு இந்த ராத்திரியில் என்ன ஆட்டம் வேண்டிக் கிடக்கிறது. ஓடிக் கொண்டிருந்தான். எனக்குத்தான் பத்தியம் பிடித்திருக்கிறது. அதுவே உண்மை. நான் ஓடிக் கொண்டிருந்தேன். டயர்ச் சக்கரம் கழட்டிக் கொண்டாப் போல… திடீர்னு என் கால் எனக்கு முன்னே ஓட, நான் மடிந்மை விழு… நாயொன்று தூக்கம் கலந்த எர்ரிச்சலில் 247-ல் ர்ர்ர் என ஒற்ற எழுத்து அதற்கு ஞாபகம் வந்தது. தமிழில் மீதி எழுத்துகள் எங்கே? ர் நாயின் பீதி எழுத்தா? பிச்சக்காரனிடம் கழி… என்னிடம் இல்ல. பிச்சக்காரனின் மூன்றாவது கால். நிஜக்கால். அது பொய்யான நிஜம். கால் பேசியது. நானும் உன்னோடு வருகிறேன். அடம் பிடிக்கும் குழந்த. ர்ர்ர். நான் பயந்தவன்தான். நாயே ‘என்’ காலக் கடித்து விடாதே. நான் ஓட கால்கள் தேவ. சீ என்ற எழுத்து ஞாபகம் வந்தது. மீதி 246ஐ நான் மறந்து விட்டேன். ஆமாம் எனக்குப் பைத்தியம்.

செத்துப்போனான். ஒழுங்காக பிளாட்பார ஓரத்தில் அனந்த சயனம் கொண்டிருக்கலாம். கழி அல்ல, மந்திரக் கோல். சூ மந்திரக்காளி. கழிய விட்டெறிந்தான். என் நெற்றிப் பொட்டு தெரித்தது. நான் ஓடிக் கொண்டிருந்தேன். கூட காலே இல்லாமலே அவன் எப்படி என்கூட வந்து கொண்டேயிருக்கிறான். என்ன அவசர சரஅவ அரசவ நட நடந்து போனான். பத்தடி முன்னே அவன் போனான். எனக்கு என்னவோ அவன் துணை திடீரெனத் தேவயாய் இருந்தது. பேசவில்ல. ஆனாலும் உருவசாட்சியாக அவன். நான் முடிந்த விரவில் பின் தொடர்ந்தேன். மண்பாத. கண்ட நாற்றமும் இருந்தது. இரவு. தூக்கக் கலக்கம். நான் ஓடிக் கொண்… நாய்கள் எங்கே… நிற்கிறேன். மூச்சிறத்தது. ரயில் வெளிச்சம். பெட்ரோமாக்ஸ். கிளமாக்ஸ். கால் நடனம். உருண்டு புரண்டு புரண்டு அழுகிற குழந்த. வியர்க்கிறது. மூச்சு முட்டுகிறது. என்ன பயங்கரமான பொய்யான இரவு. ரயிலின் மறுபக்கம் அவன் அறயப்பட்டு விழுந்து… கால் கூட என்னிடம் அல்ல, அவனிடம்தான் பேசியிருக்கும். நான் பயந்து… என்னிடம் ஏன் அது முறயிட வேண்டும். ஒருவேள நான் செத்து, அவன் பிழத்திருப்பானோ? காவி வேட்டி. முழுக்கச் சட்ட நானா இது? கழி எங்கே? சூது மந்திரக் கழி. அது மோதிய கணம் நிகழ்வுகள் வேகம் பிடித்தன.

தெருவோரம். சற்று நீள காம்பவுண்டு சுவர்ப்பக்கம் ஒண்ணுக்கடித்தேன். என்ன அழுத்தமாய் வெளியேறியது. ரயிலின் மண்டபோல என் ஆண்குறி. ஹா ஹா என மூச்… மூச்… மூச்சு வாங்கியது. ஹா.. என வாய் திறந்து மூச்சு விட்டேன். வியர்த்திருந்தது. கால்கள் வலித்தன. நான் இறந்த கணம் அது. ஒரு மனிதன். இல்ல பிணம் இப்போ. நான் பயந்தலறி ஓடி ஒளிகிறேன். என்னாயிற்று தெரியாது. நான் அவதானித்திருக்க வேண்டும். ரயில் நிற்காமல் போகிறது. டிரைவரும் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறானா? உயிரின் பயந்த ஊள. அதான் மனிதனின் உண்மக் குரல். மற்ற நேரம் மனிதர்கள் பாசாங்குக் குரலில் பேசுகிறார்கள். பொய்க்குரலில் பாடுகிறார்கள். ரயில் அந்தப் பிச்சக்காரன தாயக்கட்டயாக ஆடியது. மற. அனத்தயும் மற. போய்ப்படு. காலயில் சீக்… வீதி விளக்கு வெளிச்சத்தில் யா… அந்தப் பிச்சக்… அவன் இறந் விட்டதாக… பொய். சௌக்கியமா? – சிரிக்கிறான். எனக்கு இடது பக்கம். ஜோரான நட. பேசாமல் போய்க்கொண்டிருந்தான். உண்ம. செத்தபின் பேச ஆரம்பிக்… கூட வந்திட்டிருந்தியே. தனியே விட்ட்டுப் போயிட்டா எப்டி? கால் மாத்திரம்… இல்ல. பொம்மலாட்ட பொம்மயாய் ஆடியபடி நின்றான். மூக்கு கூட சிறி நசுங்கி, குஷ்டரோகி. வேட்டி காவி. இல்ல அது ரத்தம். வெத்திலக் கறயோ.
நானும் கூட வர்றேன். என்ன விட்ட்டுப் போறியே. நான் திரும்ப ஓட ஆரம்பித்தேன். அப்ப நீ என்கூட வர நினச்சே. நான் கவனிச்சேன். இப்ப என்ன மாத்திரம் நீ… ஓட ஆரம்பித்து… நாய் ரத்தம் இந்தா. கழிய எறிகிறான். சூது மந்திரக் கழி. என்னால் உறங்க முடியுமா இன்று? விழித்திருக்கவும் முடியாது. எத்தன நேரங் கழித்து கட மூடினாலும் காலயில் தாமதமாகப்போக முடியாது. ஆமாம், ஹி… என்கிறான் பிச்சக்காரன். உன்னக் கேட்டனா? நீ ஏன் தொந்தரவு பண்றே? – என்னயும் கூடக் கூட்ட்டுப் போ. அழும் பிடிவாதக் குழந்த. சூ மந்திரக் கழி. கோலாட்டம். பிறகு காலாட்டம். ஐயோ. எங்க… உன்னால ஆமா முடியாது ஹிஹ்ஹி… உன்னக் கேட்டனாய்யா?

குப்பென்று விளக்குகள் அணைந்தன. ஐயோ வெளிச்சம்…. ரயில் வெளிச்சம் வேணுமா? ஹிஹ்ஹீஹி… துணைக்கு நான் கூட வர்றேன். பிறகென்ன பயம். நில்லு. ஏ நில்லு. பெருஞ்சிரிப்பு அருவருப்பு. இல்ல. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. திடீரென பயத்தில் எனக்குக் கண்ண இருட்டியிருக்கிறது. மூச்சிறக்கிற. நான் எங்கே போய்க்… என் வீடு எங்கிருக்கிறது? பிளாட்பாரத்திலேயே தூங்கி யிருக்க… என்னுடனேயா, ம்… சரி, வா. சிரிக்காதே பொணமே. நான் செத்தப்போ ரயில் டிரைவர் டாடா காட்டினான். தாள முடியாமல் நின்று நெஞ்சப் பிடித்துக் கொண்டு ஓங்கரித்து வாந்தி எடுத்தேன். தல சுற்றியது. கையேந்தி பவன் பரோட்டா செரிக்காமல்… காலியோ காலியாய்த் தெரு. என்ன பயங்கரமான இரவு. நாயுங் கூட இல்லாத இரவு. நட தடுமாறியது. மாறியது. மாடுதறிய. யடுமாதறி. இதெல்லாம் தமிழா? எழுத்த மறந்தவன் வார்த்தயே மறந்து விட்டதா… கிழவனும் இப்பிடி உடம்பக் கன்னாபின்னா என்று உருக்குலைத்துக் – உருக்குறைத்துக் கொண்டு விட்டான். கிழவன். ழகிவன். வகிழன். கின்வழ. வன்ழகி. வழன்கி. எனக்கு என்னாச்சி. தூக்கம் வராது இன்றைக்கு. என்ன செய்யப் போகிறேன். இராத் தூக்கம் முழித்து காலயில் தூங்கி விட எனக்குக் கட்டுப்படியாகாது. தல சுற்றியது. மளுக். அந்தப் பக்கம் ஓட இருந்தான். கால் மாத்திரம், தீபாவளி ராக்கெட், என் முன் ஜிங்கு ஜினுக்கு … என்ன ரத்தத் தெறிப்பு. அவனின் குரல். ரயில் நிற்கவே இல்ல. அட அந்தக் காட்சியப் பார்க்க என் கூட யாருமே… நான் இருந்தேன் – ஹிஹீ… தலய உதறிக் கொண்டான்.

அவன் வீடு மிதந்து அவன நோக்கி வந்தது. தள்- கள் குடித்தாற் போல – தள் ளாடி கதவத் திற… விளக்கப் போட்… படுக்க யெங்கும் ரத்தம். ரயில் தண்டவாளம் போலக் கிடந்த போர்வ. படுக்கயில், நிஜம். அந்தப் பிணம் கிடந்தது. நான் உன்ன மாதிரி இல்ல. என்னவிட்டுட்டு நீ போனே. நான் உன்ன விட்டுப் போக மாட்டேன். திரும்பவும் வாந்தி வரும் போலிரு… ஓவென்று பெரிசாய் அழ… பிணம் அவனயே… நேரமாச்சி, வா என்னோடு படுத்துக்கோ.

**** 

About The Author