நண்பனுக்கு.. (1)

1.
எப்போதும் மூடப்பட்டே இருக்குது
உன் வீட்டுக்கதவும்
என் வீட்டுக்கதவும்
உன்னைப்போலவும்
என்னைப்போலவும்.
ஒருக்களித்தாவது
திறந்துவைப்போம்
நம் கதவுகளை
உன் முகத்தை நானும்
என் முகத்தை நீயும்
எப்போதாவது
பார்க்கும்பொருட்டு.

2.
அதீதாவைப் பற்றி
எதுவுமே தெரியாதென்கிறாய்
குறைந்தபட்சம்
உன் உயிரின் இருப்பை
உணர்ந்துள்ளாயா நண்பா?
அதீதாவை அறிந்ததினால்
அறிந்துள்ளேன் அப்பனே
என்
உயிரின் பொருளை
மற்றும் அதன் ரகசியத்தை.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author