நம் சிறைகளின் வலைப்பின்னல் (2)

2.
நானுனக்கு விஷம்,

நீயெனக்குப் பெருவிஷம்!

நீயெனக்கு விஷம்,

நானுனக்குப் பெருவிஷம்!

வேறெங்கும் இல்லை

நமக்கான படுகுழி:

எனக்கானது உன்னில்!

உனக்கானது என்னில்!

நீயும் நானும்

ஒழிந்துபோகும்வரை

ஒழியப்போவதில்லை

நம் தீரா ஓலம்!

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Pleaseclick here

******

About The Author

2 Comments

  1. s.e. lakshmi narayanan

    சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். நாந்தான் ப்ரம்மம் என்ற உணர்வு தோன்றிவிட்டாலே உள்ளிருக்கும் அந்த ப்ரம்மத்திற்கு மரியாதை தரும் வகையில் மனம் நல் வழியில் திரும்ப வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நம் சிந்தனை செயல் அனைத்தும் ஆன்மீக வழியில் இருந்தால் மட்டுமே மேற்சொன்ன உணர்வு தோன்றும். ஆனால் தறி கெட்டு அலையும் நம் மனத்தை அடக்கி ஆன்மீக வழியில் திருப்புவது என்பது மிகக் கடினமான செயல் ஆக உள்ளது. ஆனால் நம் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் இறைவன் திரு நாமத்தை உச்சரிக்கப் பழகிக் கொள்வதன் மூலம் நம் மனம் என்னும் பாய் மரம் இல்லா படகிற்கு பாய்மரம் கட்டி விடலாம். பாய்மரம் கட்டிய படகினை காற்று அடிக்கும் திசையில் செலுத்த மிகுந்த திறன் தேவையில்லை. அதுபோல் பாய்மரத்தையொத்த இறைவனின் நாமம் நம்மை இவ்வாழ்க்கை என்ற ஆழியின் நடுவே காற்று என்ற ஆன்மீக வழியில் எவ்வித சிரமமும் இல்லாமல் இட்டுச் செல்லும் என் நம்புகிறேன்.

Comments are closed.