நரியும் கரடியும் (2)

கரடி இங்கும் அங்கும் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. ஆனால் பாவம்! அங்கு ஒரு வால் கூட இல்லை. எந்த விலங்கையும் காண முடியவில்லை.

கரடிக்குத் துக்கம் தாள முடியவில்லை. ‘இனி நான் என்ன செய்வேன்? எல்லோருக்கும் வால். ஆனால், எனக்கு மட்டும் இல்லை’ என்று தன்னையே நொந்து கொண்டது.

கரடி கோபமாய்த் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லத் தொடங்கியது. அப்படி மெல்ல அது நடந்து வரும்போது வளைக்கரடி அங்கே ஒரு மரக்கட்டை மீது உட்கார்ந்து, தன்னுடைய அழகான வாலைச் சுருட்டியும் முறுக்கியும் வளைத்தும் ஆட்டியும் மகிழ்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், அதிக ஆத்திரத்தை அடைந்த கரடி, "ஏய்! உனக்கு எதற்கு இவ்வளவு அழகான வால்? அதை எனக்குத் தந்து விடு" என்று மிரட்டியது.

அதைக் கேட்டதும், திடுக்குற்ற வளைக்கரடி, "கரடியாரே! நல்ல வேடிக்கைதான். என்ன விளையாடுகிறீர்களா? எவ்வளவு அழகான வால் எனக்குக் கிடைத்திருக்கிறது! இதைப் போய் நான் உங்களுக்குத் தர வேண்டுமா?" என்று எதிர்க் கேள்வி கேட்டது.

உடனே கரடி, "நீயாகத் தராவிட்டால், நான் உதைத்துப் பிடுங்கிக் கொள்வேன்" என்று உறுமியவாறு தனது கனத்த பாதத்தை வளைக்கரடியின் வால் மேல் வைத்து அழுத்திற்று.

அதனால் கோபமடைந்த வளைக்கரடி முழு பலத்தையும் கொண்டு கரடியின் பிடியில் இருந்து தன் வாலை இழுத்துக் கொண்டு, "உனக்கு இது கிடைக்காது" என்று கத்தியவாறு தப்பித்துக்கொண்டு ஓட்டமாய் ஓடி விட்டது.

கரடி தன் பாதத்தைப் பார்த்தது. அதில் வாலின் நுனிப் பகுதி மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. இதுவாவது கிடைத்ததே என்று எண்ணியவாறு, கரடி அந்த வால் நுனியைத் தன் பின்னால் அழுத்தி ஒட்டிக் கொண்டு மரப்பொந்தில் மீதியிருந்த தேனைக் குடிக்கப் புறப்பட்டுச் சென்றது.

ஆனால், தப்பி ஓடிய வளைக்கரடி மிகவும் பயந்து விட்டது. இனி என்ன செய்வது என்ற புரியாமல் தவித்தது. எங்கே ஒளிந்து கொண்டாலும் கரடி எக்கணமும் திரும்பி வந்து விடும், எஞ்சியுள்ள தனது வாலையும் பிய்த்துக் கொண்டு போய்விடும் என்று அது பயந்தது. ஆகவே, தரையில் பெரிய வளை தோண்டி அதையே தனது உறைவிடமாக ஆக்கிக் கொண்டது. நாளெல்லாம் அங்கேயே பதுங்கியிருந்தது. இரவில் மட்டும் வெளியில் சென்று உணவு தேடியது.

ஒருநாள் அப்பக்கமாய் வந்த நரி, தரையில் வளை இருப்பதைப் பார்த்து விட்டு அருகே வந்தது. தரைக்குக் கீழே இருந்து பலத்த குறட்டைச் சத்தம் வெளியே வரை கேட்டது. இப்படித் தரைக்கு அடியில் தூங்குவது யார் என்று ஆச்சரியத்துடன், வளைக்குள் தலையை மெல்ல நுழைத்து எட்டிப் பார்த்தது நரி. அஙகு வளைக்கரடி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தது.

"ஐயா தோழரே! மேலே உனக்குச் சிறிது இடம் கூடவா கிடைக்கவில்லை? இப்படித் தரைக்கடியில் வந்து உறங்கிக் கொண்டு இருக்கிறாயே" என்று கேட்டது.

அதைக் கேட்டதும், "என்ன செய்வது நரியாரே? எனக்கு மேலே இடம் இல்லாமல்தான் போய்விட்டது" என்று வருத்தத்துடன் கூறியது. "இரை தேட வெளியே வராமல் இருக்க முடியுமானால் நான் இரவில் கூட உள்ளேயே இருந்துவிடுவேன்" என்று கூறிய வளைக்கரடி, தான் கரடியிடம் மாட்டிக் கொண்டதையும், தன் வாலைக் கஷ்டப்பட்டுப் போராடி மீட்டுக் கொண்டு வந்ததைப் பற்றியும் நரியிடம் விவரித்தது.

நரிக்கு உடனே கிலியாகிவிட்டது. "அப்படியா!" என்று அச்சத்துடன் கேட்டது.

‘இதன் வாலைக் கரடி அபகாரித்துக் கொள்ள முயன்றதென்றால், அதைவிடப் பல மடங்கு அழகான என்னுடைய வாலுக்கும் அபாயம் காத்திருக்கிறது என்றல்லவா அர்த்தம்’ என்று நினைக்ககத் தொடங்கியது.

உடனே, கரடியின் கண்ணில்படாமல் ஒளிந்து கொள்ளத் தனக்கும் ஒரு மறைவிடம் தேடி அது ஓடிற்று. இரவு முழுவதும் தேடியும் நரிக்குப் பதுங்கத் தக்க இடம் கிடைக்கவில்லை. முடிவில், பொழுது விடியும் நேரத்தில், வளைக் கரடி பொந்து போலத் தனக்கும் ஒரு பொந்து தோண்டிக் கொண்டு, அதனுள் புகுந்து அடர்த்தியான, அழகான தன் வாலால் தன்னை மூடி மறைத்துக் கொண்டு நிம்மதியாய் உறங்கத் தொடங்கிற்று நரி.

அது முதலாய் வளைக் கரடியும், நரியும் பொந்துகளிலேயே வசித்து வருகின்றன. கரடியானது இதுநாள் வரை சிறு குமிழ் போன்றதையன்றி வேறு வால் இல்லாமலே வாழ்ந்து வருகிறது.

(முடிந்தது)

About The Author

2 Comments

  1. vettriyarasan

    ணில க்ரொஉப் சுபெர். ஈ நொஉல்ட் லிகெ டொ ஜொஇன் டொ செர்வெ இன் திச் க்ரொஉப். இ கட் சென்ட் ம்ய் ரெசுமெ fஒர் Cஓ,ஆDMஈண்,Pற்,TYPஈண்G, ஆண்D Fஈற்ஸ்T ஈ Wஆஸ் ஸேளேCTஏD Fஓற் Cஓ Pஓஸ்T,ஆண்D ஊண்Fஓற்TஊணாTஏள்Y றேJஏCTஏD. ஈF ஊ GஈVஏ Mஏ ஆண் ஓPPஓற்TஊணீTY Tஓ Tஓ Wஓற்K ,ஈ Wஓஊள்D றேஆள்ள்Y ஸாTஈஸ்FஈஏD . ணோ ஏXPஏCTஆTஈஓண் .ஈ Wஓஊள்D றேண்Dஏற் MY ஸேற்VஈCஏ ஈண் THஈஸ் ணீளாCHஆறாள்.HஓPஏ ஈ MஆY ஏXPஏCT FஆVஓஊறாBளே றேPள்Y

  2. vettriyarasan

    ஹேமா கரடிவால் கதையில நல்லா வாலைவிடறீங்க.! ஏங்க எங்களைக் கூட நிலாசாரல் குடும்பத்தில் இணைத்து பணியாற்ற செய்யகூடாதா? விண்ணப்பம் செய்தும் உள்ளேன். சேவை செய்ய நான் ரெடி. வாழ்க்கையில் எப்ப்டியேனும் நிலாச்சாரலில் பதிவு செய்ய நீண்ட நாள் கனவு. 16.12.2009 லிருந்து நிலாவை பின் தொடர்ந்து படித்தும் ,அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், உடல்நலத்தை பேணுவதிலும் ,ஆன்மீக கட்டுரைகள், பூஞ்சிட்டு பகுதி, அறிவியல் மற்றும் “உடலறிவு” புதுவிளக்கம் மனத்தினுள் ஒவ்வொரு செல்களினூடே பாய்ந்து ஜீவகாந்தமாக வியாபித்து நிலாவில் எழுதச் செய்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வது தனது சொந்த வலைதளத்திற்கு எழுதுவதற்கு சமம். என்னை பயன்படுத்தி கொள்வது சிறந்தது. அணுகுக; abrgreen07@gmail.com

Comments are closed.