நல்லோர் இயல்பு

மழை நீர் துளி

பழக்கக் காய்ச்சிய இரும்பில்
பட்டவுடன் ஆவியாகி
மறைந்து விடும்

தாமரை இலைமேல் விழுந்தால்
முத்து போல்
அழகாக தோற்றம் தரும்

கடலில் சிப்பிக்குள்
விழும் வாய்ப்பிருந்தால்
முத்தாகவே மாறிவிடும்

கீழோர்
மத்திமர்
மேலோர்
ஆகியவர்களின் இயல்பு
அவரவர் சேர்க்கையால் அமைகிறது.

(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)

About The Author