பத்துக்கண்கள்

இரவு பூட்டப்பட்டிருந்த
வீட்டுக்கதவு திறக்கப்பட்டு
இருள்
களவாடப்பட்டிருந்தது…
வெளியே வந்து பார்த்தேன்
வீதியெல்லாம்
சிதறிக் கிடக்கிறது பகல்

மின்காந்த அலைகளுமிழும்
அவளினிரு கண்களைத்
தவிர்க்க வேண்டி
தலை கவிழ்ந்தேன்…
பாதங்களில்
பத்துக் கண்கள் கொண்டு
வெறிக்கிறாள்

***

கடையிலிருந்து
வாசித்த புத்தகமொன்றை
எண்ணத்தில் ஒளித்து
எடுத்து வருகிறேன்…
திருட்டையறியாத
விற்பனையாளர்
மீண்டும் வரச் சொல்கிறார்

About The Author