பன்னிரு திரு நாமப் பெருமை !

கேசவா நாரணா என்றுருகிப் பாடினால்
கெடுமதிகள் தொலைந்து போகும்
கீழ்மேல் எழுபிறப்பும் நமக்கே பற்றாவான்
கிண்கிணி வாய் மாதவன்

வாசவன் கோவிந்தன் வளர்சோதியாம் விட்டு
வண்ணமுற நமைக் காப்பனாம்
வல்லரக்கரை வென்ற மதுசூதனன் திரி
விக்கிரமன் துணையாவனே

யாசகன் வாமனன் எம்மான் சிரீதரன்
இருடீகேசனை எண்ணினால்
எவ்வினையு மணுகாது நீங்காமலே திரு
இரு நிதிய மளித்து மகிழ்வாள்

வாசமலர் பற்ப நாபா தாமோதரா வென்று
வாய் நிறைய அழையுங்களேன்
வையத்தில் பன்னிரு திரு நாமத்தின் பெருமைகளை
வாழ்வாங்கு உய்த்து மகிழ்வீர் !

About The Author