பாபா பதில்கள்

தானமும் தவமும்

நீங்கள் சரீரத்திற்காக எல்லாவற்றையும் செலவு செய்து கொண்டிருக்கிறீர்களே தவிர ஆத்மாவிற்காக நீங்கள் சொத்து சேர்ப்பதே இல்லை. ஆத்மாதான் நிஜமான வஸ்து. நீங்கள் நிறைய தானம் செய்யவேண்டும், தவம் செய்யவேண்டும், க்ஷேத்திராடனம் செய்ய வேண்டும்., தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும், யோகம் செய்யவேண்டும். அப்போதுதான் ஆத்மாவிற்கு வழி கிடைக்கும். நீங்கள் இவ்வாறெல்லாம் செய்து ஆத்மாவிற்கு சொத்து சேர்க்க வேண்டும். பொருளால் அமரருலகம் சித்தி பெறலாகாது – பொருளை எடுத்துக் கொண்டு தேவலோகம் போக முடியாது. அருளை வைத்துக் கொண்டுதான் போக முடியும்.

About The Author