பிடித்தது…

உன் அம்மாவைப் பிடிக்கும்,
இப்பூவுலகில் கொணர்ந்ததற்காக!

உன் அப்பாவைப் பிடிக்கும்,
உன்னைப் படிக்க வைத்ததற்காக!

உன் தம்பியைப் பிடிக்கும்,
தினமும்நின் தரிசனத்திற்குக் காரணமாதலால்!

ஆனால்
உனக்குப் பிடித்ததோ
அந்தப் போலீஸ்காரரை…

உன்பின்னே சுற்றியதற்கு
என்னை நையப் புடைத்ததனால்…

About The Author