மண்

மண்ணிது குப்பை வெறும்புழுதி—-எந்த
மன்னனின் பொன்னுடல் மிச்சமிதோ?
கண்ணைக் கவர்ந்தவர் பெண்ணழகி—-வண்ணக்
கன்னக் கதுப்பு சிதைந்ததுவோ?

விண்திரை முட்டிய மாளிகைதான்—-நெஞ்சு
விம்மி வெடித்துப் பொடித்ததுவோ?
எண்ணச் சிறகினை வாழ்வுதிர்க்க—-வானம்
எட்டாத புள்ளுடற் பூந்துகளோ?

காலில் மிதிக்கின்ற தூசியிது—-நம்மைக்
காலம் மிதிக்கின்ற போதினிலே
வாலிபம் நைந்துடல் விந்தைசெலும்—-உயிர்
வண்டிந்தப் பூவினை விட்டகலும்

—-

About The Author