மறுபக்கம்

ஒவ்வொரு முறையும்
கடல் உள் வாங்கும்போது..
பூமி அதிர்ந்தால்..
பயணித்தவர் மரித்த
பட்டியலைப் பார்த்தால்..
ஆம்புலன்ஸ் சைரன்
கேட்டால்..
வீடு திரும்பும்போது
காலடியில் சிதறிய பூக்களைக்
கண்டால்..
ஓரிரு நிமிடங்கள்
அதிர்கின்ற மனசாட்சி
எத்தனை சுலபமாய்த்
துடைத்து விடுகிறது..
மறுபடி சீறும்போது!

About The Author