மாமதயானை கவிதைகள்

குழந்தையின் உண்டியல்
உடைவதற்கு முன்
உடைந்து போனது….
கண்ணாடி மனசு

***
பளு தூக்கும் வீரனால்
சுமக்கமுடியவில்லை…….
குடும்பபாரம்

***
பல இரவு விழித்திருந்தவன்
உறங்கிவிட்டான்….
முதலிரவில்

***
கடும் கோடையிலும்
அம்மா எப்படி பொழிகிறாள்….
பாசமழை

About The Author