மிஞ்சியிருக்கும் கேள்வி

உனக்கும் எனக்கும்
என்ன பேர்?
பேசும் நான்
கேட்கும் நீ;
பேசுவது நானென்பதும்
கேட்பது நீயென்பதுவும்
முற்றிலும் சரிதானா
அதன் உண்மையான உண்மையில்?
பேசுவது கொடுத்தல்;
கேட்பது ஏற்றல்;
சரிதானா?
ஆயினும்
இன்னும் மிஞ்சியிருக்கு கேள்வி:
பேசும் நான் யார்?
கேட்கும் நீ யார்?
நான் நீயோ
நீ நானோ ஆனோமெனில்
தலைகீழாகிடும் எல்லாம்!
ஒருவேளை
நான் நீ என்பதெல்லாம்
வேறெதுவோ?

About The Author