மீளாப் பாதைகள்

வெட்டவெளி பார்க்க
கூடுடைத்துப் போன பறவை
திரும்பவில்லை கூட்டுக்கு

“இதோ வருகிறேன்” என்று
மரம்தழுவிச் சென்ற காற்று
போன இடம் தெரியவில்லை

காய்த்து கனிந்த பிறகு
தெரிவதில்லை பூக்கள்
பட்டாம் பூச்சிகளுக்கு

கடிகாரக் கால முட்கள்
சுற்றிச் சுற்றிச் வந்தாலும்
வந்த இடமல்ல வந்தது

கசப்பின் கால் கொண்டு
நெடுந்தொலைவு வந்த பிறகு
திரும்ப முடிவதில்லை காதலுக்குள்

About The Author

3 Comments

  1. கருவெளி" ராச.மகேந்திரன் "

    ஒரே நதியில் நீ இருமுறை குளிக்க முடியாது… என்பதற்கு… சிறந்த விளக்கங்களாக எடுத்துக்கொண்டேன்…கவிக்கு மிக்க நன்றி

Comments are closed.