ரிஷபனின் கவிதைகள்

கீறல்கள்

நகங்களை யாரும்
நினைவில் வைப்பதில்லை.
நிறைய முறை வெட்டப்பட்டு
மீண்டும் வளர்ந்து..
உதிர்ந்த துணுக்குகள்
மண்ணோடு மக்கி..
எங்கோ சிதறி..
நினைவைப் பின்னோக்கினால்
கீறல்கள் மட்டும்
அழியாச் சித்திரமாய்!

உண்மை

மனசுக்கு மனசு
வித்தியாசப்படும்.
வார்த்தைக்கு அகப்படாமல்
ஜாலம் காட்டும்.
வெளிப்படும்போது
சுயமிழந்து போகும்.
‘இல்லை’யென்று
வேறொருவர் நிரூபிக்கும்வரை
எதுவுமே உண்மைதான்
எனக்கு!

About The Author

1 Comment

Comments are closed.