லக.. லக… ஜோக்ஸ் (98)

நபர் : இறப்புக்குப் பின்னும் வாழ்க்கையுண்டான்னு ஏன் கேட்கறீங்க, சார்?

மானேஜர் : சைதாப்பேட்டை சித்தப்பா செத்துப் போனாருன்னு நீ லீவு போட்டுட்டு முந்தாநாள் போனீயே, இன்னைக்கு அவரே உன்னைப் பார்க்க நேர்ல இங்க வந்திருக்கார்.

******

பெண் 1 : என் வீட்டுக்காரரு ஆபிஸ்ல தூங்கும்போது பயங்கரக் கனவு கண்டு மிரண்டு போயிருக்காரு…

பெண் 2 : என்ன கனவு?

பெண் 1 : அவரு கழுதையா மாறி பேப்பரைத் திங்கிற மாதிரி கனவு கண்டிருக்கார்.

பெண் 2 : அதுக்கு ஏன் மிரளணும்..?

பெண் 1 : தூங்கி முழிச்சிப் பார்த்தப்போ, மேசையில அவர் வச்சிருந்த முக்கியமான பேப்பர்களையெல்லாம் காணோமாம்.

******


ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்….

மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு….

******

ஒருவன்: அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டைத் திறப்பதற்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

மற்றவன்: ஓ! படத்துக்கு அந்த அளவுக்கு கூட்டமா?

ஒருவன்: இல்லப்பா, படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி வர்றவங்க வெளியே போறதுக்கு கேட்டைத் திறக்க லஞ்சம் கேட்கிறார்கள்…

******

பெண் 1 : என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்….

பெண் 2 : ஏன்?….

பெண் 1 : என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேரை அடிக்க முடியாது….

******

About The Author