வரலாற்றுக்கு ஒரு பாடம்

கிழித்து எறிவோம்!
கேவலமானவை, வரலாற்றி‎ன்
‏இந்தப் பக்கங்கள்…
எ‎ங்கெங்கும்
கோலேந்திகளி‎ன் இரத்தவெறிக்குப்
பலியான பாமரர்களி‎ன்
பகல்களும் இரவுகளும்

இதோ
இந்தப் பக்கங்கள்மேல்
கடிவாளம் பூட்டாத நெருப்பை
ஏவிவிடுவோம்!

குருபீடங்கள் பரப்பிய
முடைநாற்ற மூடப் பிணிகளால்
அறத்தி‎ன்
செல்லரித்த நரம்புகளும் எலும்புகளும்
குவிந்து கிடக்கி‎‎ன்றன.

விரல்களில் துடிக்கும்
ஆத்திரத்தை
விடுதலை செய்வோம்..

இங்கு இ‏ன்னும் ஓயவில்லை
சந்தர்ப்பவாதிகளின்‎
சதுரங்க ஆட்டத்தில்
வெட்டுப்பட்ட
அரசியல் நெறிமுறைகளி‎‎ன் கடைசி
அலறல்!

இனி,
தோற்கடிக்கப்பட்ட
நியாயங்களி‎ வாக்குமூலத்திலிருந்து
தொடங்குவோம் வரலாற்றை.

சரித்திரத்திற்கு உரிய
அசல் மனிதர்களி‎ன்
அடையாளங்களைத்
தேர்ந்தெடுக்கும்படி
கட்டளை போடுவோம்
முதல் அத்தியாயத்திற்கு.

பதவி வெறிகளால்
கடித்துக் குதறப்பட்ட
பண்பாட்டு அரசியலி‎‎ன்
காயங்களி‎‎ன்
கரைகளிலிருந்து
வார்த்தைகளைச் சேகரம் செய்யட்டும்
வாக்கியங்கள்.

எடுபிடியாகித்
தலைவர்களி‎‎ன் வீட்டுவாசலில்
வாலைக் குழைத்தது போதும்!
வரலாறு – ‏இனி
வாழத்துடிக்கும் மானுடனின்
மீட்சிப் போராட்டத்தி‎ன்
சாட்சியம் ஆகட்டும்!

("நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்" கவிதைத் தொகுப்பிலிருந்து)

About The Author

1 Comment

Comments are closed.