விரல் தொட்ட வானம் (25)

செவிடாய் இருக்கக் கூடாதா?
ஒரு வேலை கிடைக்கும் வரை
காதுகள்.

******

உள்வாங்கும் மழையில்
உயிர் இல்லை என்பதால்
இப்போதெல்லாம்
மழையை
விரும்புவதேயில்லை
அந்த நிலம்.

******

கொட்டும் பனியின்
கனம் தாளாமல்
தவிக்கும் புல்வெளி
வேண்டிக் கொள்கிறது
இறையிடம்
நீண்டு கிடக்கும்
பெருத்த இரவை
சுருங்கச் சொல்லி!

–தொட்டுத் தொடரும்…

 “

About The Author