விரல் தொட்ட வானம் (27)

ஏதேனும் பேசு
அடுத்தது
என் நிறுத்தம்!

********

ஆற்றுப் பாலத்தை
கடக்கிறபோது
குதிக்கின்றன
பேருந்தில் இருந்து
பல கண்கள்
குளிப்பவர்கள் மீது!

********

கோயிலுக்குள் மூடுவதில்லை
வெளியில் திறப்பதேயில்லை
பேதம் பார்க்கும் கைகள்!

–தொட்டுத் தொடரும்…

About The Author