இனிய மகளே!

கன்னற் சாறே, கனியமுதே!
கருத்தில் இனிக்கும் தமிழமுதே!
என்னை மகிழ்ச்சிக் கடலாழ்த்த
இனிய மகளாய் வந்தவளே!
உன்னின் அறிவும் வளர்த்திடுவாய்!
ஒழுக்கம் அறங்கள் போற்றிடுவாய்!
இன்னா கொடுமை இவ்வுலகில்
இல்லா தாக்க எழுவாயே!

About The Author