ராமனாதனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டே பெண்கள். திவாகர் முதல் மாப்பிள்ளை.அதிர்ஷ்டவசமாய் நல்லவனாய் அமைந்து விட்டான். மாலதிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை அமைந்து விட்டால் போதும். அதற்குத்தானே இப்போது வந்தது.
"அது அப்படித்தான்....நான் சொல்ற மாதிரி செய்யுங்க...விவரம் எல்லாம் அப்புறம் சொல்றேன்" என்றாள் மெல்லிய குரலில்.
ராமனாதன் ஆர்வமாய்க் காத்திருந்தார்.
"என்ன மாப்பிள்ளை...சொல்லுங்க..."
"அது வந்து....அவர் வேற செக்ஷன். சும்மா...பார்த்தவரை நல்ல மாதிரின்னு தோணும்...அது ஒண்ணும் பிரச்னை இல்லே... அந்த செக்ஷன்லயும் எனக்கு வேண்டியவங்க இருக்காங்க...நீங்க ரெண்டு நாளாவது இருப்பபீங்க இல்லையா...நாளைக்கு விசாரிச்சு முழு விவரம் சொல்லிடறேன்" என்றான் தயங்கிய குரலில்.
'அப்படியா' என்றார் ஏமாற்றத்துடன்.
பேச்சு பின்னர் வேறு திசையில் போனது. எப்படியும் நாளைக்குத் தொ¢ந்து விடும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அதுதான் சொன்னாரே பார்த்தவரை நல்ல மாதிரி என்று.
மாலதி அதிர்ஷ்டம் எப்படியோ அந்த மாதிரி அமைகிறது...என்று நினைத்துக் கொண்டார்.
சுகந்தி பேச்சோடு பேச்சாகச் சொன்னாள்.
"வெளியில பார்க்கிறது வச்சு...யாரைப் பத்தியும் ஒரு முடிவுக்கு வரமுடியாது...அந்த அரவிந்தன் உள்ளூர ஆள் எப்படியோ.." என்றாள்.
திவாகர் ஏதோ சொல்ல முயன்றான். சுகந்தி கண்ஜாடை காட்டியதும் அடங்கி விட்டான்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X